Mnadu News

அண்ணா பல்கலை தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.

மாண்டஸ் புயல் கடந்த சனிக்கிழமை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பட்டது. அதோடு, பட்டயத் தேர்வுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிச.9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24-ஆம் தேதி (சனிக்கிழமை) யும், டிச.10-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மீண்டும் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 29 ஆம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More