Mnadu News

அதிமுக பொதுக்குழு தீர்மான விவகாரம்:இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.

அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு தடைவிதிக்க கோரி ஒபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஒபிஎஸ் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர்,கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கூற எந்த அடிப்படை ஆதாரமும்; இல்லை.அதோடு,இடைக்கால பொதச்செயலாளர் நியமனம் கட்சி விதிக்கு எதிரானது என்று வாதிட்டார்.வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம்,எதிர்தரப்பின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி,ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கில் பழனிசாமி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 17-க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Share this post with your friends