அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான சசிகலா 2017-ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மனுவை சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடிக்கு எதிராக சசிகலா வழக்கு தொடர்ந்த நிலையில் செம்மலையும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சசிகலா மேல்முறையீட்டை எதிர்த்து செம்மலை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ட்வீட்களை திருத்த 1 மணி நேரம் அவகாசம்: ட்விட்டர் எடிட் பட்டன் அம்சம் அறிமுகம்.
பயனர்கள் ட்வீட்களை திருத்தி எழுதலாம். இதற்கு முன்னர் பதிவு செய்த ட்வீட்களை திருத்த...
Read More