Mnadu News

அன்பு ஜோதி காப்பக வழக்கு: 8 பேருக்கு வரும் 28ஆம் தேதி வரை சிபிசிஐடி காவல் நீட்டிப்பு.

விழுப்புரம் அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் மனிதஉரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாகவும் எழுந்த புகாரின் பேரில், காப்பக உரிமையாளர் ஜிபீன் பேபி, அவரது மனைவி மரியாள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட நிலையில், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து வேடம்பட்டு சிறையிலும், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 பேரும் தனித்தனி போலீஸ் வாகனங்களில் விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அனைவரும் நீதிபதி புஷ்பராணி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 8 பேரையும் வரும் 28-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 8 பேரையும் வரும் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More