அமெரிக்காவில் உள்ள மேற்கு டெக்சாஸில் எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. ஆனால் பயப்படும் அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தகவல் கூறி உள்ளனர்.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:35 மணிக்கு ஏற்பட்டு இருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம், வடக்கு டெக்சாஸ் பன்ஹேண்டில் அருகே லுபாக் வரை, மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒடெசா வரையிலான ஒரு பெரிய பகுதியில் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.