Mnadu News

அம்பானி குடும்பத்திற்கு ‘இசெட் பிளஸ்’ பாதுகாப்பு: செலவை அம்பானி ஏற்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், இந்திய பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மத்திய அரசு, மும்பை போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். முகேஷ் அம்பானிக்கு ‘இசெட் பிளஸ்’ பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி வந்தது. ஆனால், இந்த பாதுகாப்பு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே வழங்கப்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அம்பானி தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசெட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு இசெட் பிளஸ் பிரிவு பாதுகாப்பிற்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானி குடும்பமே ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More