Mnadu News

அருணாசலில் புதிய விமான நிலையத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி.

2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி ஹோலோங்கியில் பசுமை விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். சுமார் 640 கோடி ரூபாய் செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமை விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. டோனி என்றால் சூரியன் என்றும் போலோ என்றால் சந்திரன் என்றும் குறிப்பிடப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில 8 ஆயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More