Mnadu News

அல்லாவே ராமரை அனுப்பி வைத்தார்: ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை.

காஷ்மீரின் உத்தம்பூர் நகரில், பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா ,நான் இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கடவுள் ராமர் முழுக்க முழுக்க இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவர் இல்லை. அவர் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், மற்றவர்களுக்கும் உரித்தானவர். அதேபோல்தான் அல்லாவும் முஸ்லிம்களுக்கான கடவுள் மட்டுமே அல்ல. அவரும் அனைவருக்குமான கடவுள்.பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர் ஒருவர் இதனைக் கூறியிருக்கிறார். அவர் அண்மையில்தான் காலமானார். அவர் தன்னுடைய புத்தகத்தில் “ராமரை இந்துக்களின் கடவுள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வாக்குகளுக்காகவே அப்படிச் செய்கின்றனர். கடவுள் ராமர் எல்லோருக்குமானவர். மக்களுக்கு நல்வழியைக் காட்ட அல்லாவே அவரை அனுப்பி வைத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More