Mnadu News

அ.தி.மு.க., அலுவலக பொருட்கள்: ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடந்தாண்டு, ஜூலை.,11ஆம் தேதி, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை அடுத்த வானகரத்தில் நடந்தது.அப்போது, பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.அப்போது, பன்னீர்செல்வம் – பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில், அலுவலகத்தில் இருந்த கோப்புகள் மற்றும் ஆவணங்களை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடி சென்றதாக, போலீசில் புகார் கூறப்பட்டது.இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இச்சூழலில்,அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை மீண்டும் ஒப்படைக்கோரி, மேல்முறையீட்டு மனுவை அ.தி.மு.க., அமைப்புச் செயலர், சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை, மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More