Mnadu News

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் குர்ஜந்த் என்ற விவசாயிக்கு சொந்தமான வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 5 கைத்துப்பாக்கிகளை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த தகவலை பஞ்சாப் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹெராயின் கடத்தல் தொடர்பான விசாரணையின் போது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends