இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து 21-19, 21-15 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் கிரெகோரியா மரிஸ்காவை 38 நிமிஷங்களில் சாய்த்து 2-ஆவது சுற்றுக்கு வந்துள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ஹெச்.எஸ்.பிரணாய் 21-16, 21-14 என்ற கேம்களில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை 50 நிமிஷங்களில் வீழ்த்தினார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More