Mnadu News

இம்ரான் கைது சட்டவிரோதமானது: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு.

70 வயதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. இந்நிலையில், இம்ரான் கான் கைதை எதிர்த்து அவரது வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்த மனு விசாரணைக்கு வந்த போது, இம்ரான் கைது சட்ட விரோதம் என்று கூறி ஒரு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...

Read More