ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.அதே வேளையில், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.இடைத்தேர்தலில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு பொதுவாக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மாலை 6 மணியுடன், வாக்குப்பதிவுக்கான நேரம் முடிந்துவிட்டது. ஆனாலும் மாலை 5.30 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் மட்டும் வாக்களிக்க தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
முன்னதாக, இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வாக்காளர்கள் தங்களது வேட்பாளர்களை 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேடி வாக்களிக்க கால தாமதம் ஆனதால், சில வாக்குச்சாவடிகளில் கூட்டம் அலைமோதும் நிலையும், ஒரு மணி நேரத்துக்கு மேல் வரிசையில் நின்று வாக்களிக்கும் நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More