ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.முதல் நாளான இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய 11 சுயேச்சைகள் வருகைதந்த நிலையில், 6 பேரின் வேட்புமனுவில் திருத்தம் இருந்ததால், 5 பேர் மட்டுமே முதல் நாளில் தாக்கல் செய்தனர்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, நாம் தமிழர், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 7ஆம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More