Mnadu News

உத்தரகாசியில் நிலநடுக்கம்: மக்கள் பீதி.

உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சமயலறையில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன. ஜன்னல் மற்றும் கதவுகளில் இருந்து சத்தம் கேட்டதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2 புள்ளி 5 ஆக பதிவாகியது. உத்தகாசி மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்துக்குப்பின் தொடர்ந்து இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது.

Share this post with your friends