Mnadu News

உலகின் பழமையான மொழி தமிழ்: மத்திய கல்வி அமைச்சர் பெருமிதம்.

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகின்றது. முதல் நாள் நிகழ்வில் காணொலி மூலம் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையானது பெண்கள், ஏழைகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ளிட்டோருக்கானது.கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரூ.1.12 லட்சம் கோடி கல்விக்காக இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது அனைத்து மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படை தேவை. ஜி20 அமைப்புக்கு தலைமையேற்றுள்ள இந்தியா, கல்விக்கான முதல் பணிக்குழு மாநாட்டை சென்னையில் நடத்தியது. இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பண்டைய காலத்தில் இருந்தே தமிழ்நாடு கல்வியின் மையமாக உள்ளது.
உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையானது தாய்மொழி, உள்ளூர் மொழியில் கல்வியை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளே.
தேசிய கல்விக் கொள்கையானது 21ஆம் நூற்றாண்டின் நமது இளைஞர்கள் எதிர்கொள்ளக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகளவில் நமது இளைஞர்கள் வேலை தேடுவதிலிருந்து வேலை அளிக்கும் மனநிலைக்கு மாறவேண்டும் என்றார்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More