சட்டப்பேரவைத் தலைவர்; அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகிற 20-ந் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. சலசலப்பு இல்லாத வகையில் அனைவருக்கும் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்படும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நெல்லை மாவட்டத்திற்கு ஏராளமான சலுகைகள் கிட்டும். நெல்லை மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் என்ன என்பது முதலமைச்சருக்கு தெரியும். இதுவரை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கை விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது எனது உரிமை. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் முற்றுப்பெற்றுவிட்டது. மகளிருக்கான உரிமை தொகை ரூ. 1,000 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதனால் விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்று கூறினார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More