Mnadu News

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 50 அறுவை சிகிச்சை தள்ளிவைப்பு.

அமைச்சர் செந்தில்பாலாஜியைக் காண, முதல் அமைச்சர்;, அமைச்சர்கள் வந்ததால், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று, துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். நோயாளிகள், பார்வையாளர்கள், உரிய பரிசோதனைக்கு பின் மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.அதனால்,மருத்துவமனையில் நடைபெற இருந்த அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இதயம், புற்றுநோயியல், நரம்பியல், ரத்தநாளம் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளில் நடைபெற இருந்த, 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this post with your friends