கடந்த மார்ச் மாதம் கனடா மற்றும் அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர். 20 ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்திய தூதருக்கும் மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது. வன்முறையை அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி இருந்தது.இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தேசவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தற்போது, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More