Mnadu News

கருத்துக்கணிப்பு தலைகீழாக மாறும்: கர்நாடக முதல் அமைச்சர் நம்பிக்கை.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தலைகீழாக மாறும் என்றும், கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. இதில் சிலவற்றில் காங்கிரஸ் கட்சி 106 முதல் 120 இடங்கள் கிடைக்கும் எனவும், பா.ஜ., 78 முதல் 92 இடங்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக பேசியுள்ள பா.ஜ.க,வை சேர்ந்த கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, ‛கடந்த தேர்தலின்போது பா.ஜ.,வுக்கு 80 இடங்களும், காங்கிரஸ{க்கு 107 இடங்களும் மட்டுமே கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கணித்திருந்தனர். ஆனால் அது தலைகீழாக மாறியது… எங்கள் கள நிலவரங்களின் அடிப்படையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், நாங்கள் பெரும்பான்மை பெறுவோம்’ என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More