Mnadu News

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ‘ஆதிர் ரஞ்சன்’

மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் பதவியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. முன்னாள் எம்.பி.யான இவர் மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் ஆதர் ரஞ்சன் சவுத்ரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதா? உள்ளிட்ட எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

Share this post with your friends