Mnadu News

காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட காஷ்மீரி பண்டிட் :இறுதி சடங்கை நடத்திய உள்ளூர் முஸ்லிம்கள்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அச்சன் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வந்து உள்ளார். இந்நிலையில், அவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த சஞ்சய், உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், துப்பாக்கி குண்டுகளால் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவரது இறுதி சடங்குகள் நடந்தன. இதனை உள்ளூர்வாசிகளான முஸ்லிம்கள் தங்களது சொந்த செலவில் நடத்தினர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சமூக நல்லிணக்கம் நீடிப்பதற்காக நீண்டகாலமாகவே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More