Mnadu News

குஜராத் பால விபத்து: பேசும்போது மேடையில் கண் கலங்கிய பிரதமர் மோடி.

குஜராத் மாநிலத்தின் பனாஸ்கந்தா பகுதியில் பல்வேறு நலத் திட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து மோர்பி பாலம் விபத்துக்குள்ளானது குறித்து பேசத் தொடங்கினார். அப்போது, தளுதளுத்த குரலில் பேசிய மோடி, மேடையின் நின்றபடியே கண் கலங்கினார். பின்னர் பேசுவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More