Mnadu News

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள்: அமித்ஷா ஆய்வு.

அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. ஆயிரத்துக்கும்; மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. 600 மரங்கள் வேருடன் சய்ந்தன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. காற்றில் அடித்து செல்லப்பட்டும், மரங்கள் விழுந்தும் பல வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் பிபர்ஜாய் புயலின் பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம் மாநில முதலமைச்சர் உடன் இணைந்து ஹெலிகாப்டர் மூலம் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மாண்ட்வி சிவில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்ட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More