Mnadu News

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதையடுத்து, பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நிலைமை சரியானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends