Mnadu News

கூட்டாட்சி தத்துவத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம்: பிரதமர் மோடி உரை.

கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பின்னர், டிஜிட்டல் அறிவியல் பூங்கா மற்றும் கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டங்களை துவக்கி வைத்து பேசியுள்ள அவர், வலிமையான மத்திய அரசால், இந்தியா மீதான நம்பிக்கைக்கு உற்சாகம் கிடைக்கிறது.அதனால், இந்தியாவை பிரகாசமான இடத்தில் உள்ளதாக, உலக நாடுகள் பார்க்கின்றன.அதே சமயம், கூட்டாட்சி தத்துவத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.அதாவது, கேரளா வளர்ச்சியடைந்தால், இந்தியா வேகமாக வளர்ச்சி பெறும்.அதன் அடிப்படையில் பார்க்கும் போது, கேரளாவிற்கு முதல் வந்தே பாரத் ரயில்சேவைகிடைத்துள்ளது.அதோடு, கொச்சிக்கும் வாட்டர் மெட்ரோ திட்டமும் கிடைத்துள்ளது. பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கேரள பாரம்பரிய உடையணிந்து பிரதமர் பங்கேற்றார். அம்மாநில பாரம்பரிய வேஷ்டி, சட்டை மற்றும் துண்டு அணிந்திருந்தார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More