Mnadu News

கேதார்நாத்தில் பனிப்பொழிவு: யாத்திரிகர்களுக்கு எச்சரிக்கை.

உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பிரபல கேதார்நாத் புனித தலம் அமைந்துள்ளது. இந்த சிவன் கோவிலுக்கு புனித யாத்திரை துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக மே 15 வரை, பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சமோலி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களில், மீண்டும் கடும் பனிப்பொழிவு இருப்பதால், கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.அதன்படி, கேதார்நாத்தில் மீண்டும் கடும் பனிப்பொழிவு இருக்கிறது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் வானிலை நிலவரத்தை அறிந்து தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். பக்தர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியமானது. என்று தெரிவித்துள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More