கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாத்திக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட 15ஆம் வார்டில் பன்றி பண்ணையில் கடந்த ஒரு வாரத்தில், 170 பன்றிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன.அதையடுத்து, பண்ணை உரிமையாளர் கால்நடை பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இவர்கள் உயிரிழந்த்த பன்றியின் மாதிரியை சேகரித்து, பெங்களூரு எஸ்ஆர்டிடி ஆய்வகத்தில் மாதிரியை பரிசோதித்ததில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பண்ணையில் 43 பன்றிகள் கருணைக்கொலை செய்யப்பட்டன.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More