கேரளாவில் கடந்த 20 நாட்களில் டெங்கு, புளூ, எலி காய்ச்சலால் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.116 பேருக்கு எலிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததாகவும், இதில் 77 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டா, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் காய்ச்சலுக்கு 68 பேர் உயிரிழந்து உள்ளனர். நோயாளிகள் வருகை அதிகம் இருப்பதால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.கேரளாவில் பருவமழை துவங்கியதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More