Mnadu News

கொரோனாவில் உயிரிழந்த 2 மருத்துவர்களுக்கும் தலா ரூ.1 கோடி நிதியுதவி: கேஜரிவால் அரசு வழங்கல்.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பல லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களை பறித்தது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து பலரும் வேதனையடைந்தனர். இந்நிலையில், டெல்லியில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டு பல உயிர்களை காப்பாற்றிய இரண்டு மருத்துவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆம் ஆத்மி அரசு தலா ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களான ரமேஷ் குமார் மற்றும் மருத்துவர் சஞ்சய் குமார் ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்து டெல்லி அமைச்சரவை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் தலா ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.அதோடு,உயிhழந்த மருத்துவர்களின் குடும்பங்களை ஆம் ஆத்மி கவனித்துக்கொள்வதாக உறுதி அளித்ததாக கேஜரிவால் டிவிட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More