கொலீஜியம் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரி வழக்குரைஞர் மேத்தீவ் நெடும்பாரா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீண்ட காலமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பது குறித்து மேத்தீவ் நெடும்பாரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிடம முறையிட்டார்.அப்போது, இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட வேண்டும் என்பதாலும், அரசியல் சாசன அமர்வின் உறுப்பினரான நீதிபதி எஸ்.கே. கவுல் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலும், அரசியல் சாசன அமர்வு தற்போது ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் கோரும் வழக்கை விசாரித்து வருவதாலும் தாமதமாவதாகத் தெரிவித்தார்.இதையடுத்துப் பேசிய நெடும்பாரா, கோடைக்கால விடுமுறைக்கு முன்போ அல்லது அதன் பிறகோ வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தேதியை தெரிவியுங்கள் என கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நாங்கள் தேதி தருகிறோம் என உறுதி அளித்துள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More