Mnadu News

கோடநாடு வழக்கு விசாரணை: ஜூலை 28க்கு ஒத்திவைப்பு.

நீலகிரி மாவட்டம் பட் பயரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம்; வளாகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இந்த வழக்க்கின் விசாரணையில், குற்றச்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின்ஜாய் உள்ளிட்டோர் ஆஜராகினார். அரசு வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகி வாதாடினர். சி.பி.சி.ஐ.டி., தரப்பில் ஏ.டி.எஸ்.பி., முருகவேல் ஆஜரானார். மாவட்ட நீதிபதி அப்துல் காதர் விசாரணை நடத்தினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share this post with your friends