Mnadu News

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது:மதுரைக்கிளை நீதிபதி கருத்து.

ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி என்பவர், தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்தவிடாமல் உயர்சாதியினர் தடுப்பதாகவும் தங்கள் குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதோடு, ஆட்சியரிடம் இதுகுறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், ‘கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியதுடன் மனுதாரர் உள்ளிட்ட பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More