Mnadu News

கோவை மருதமலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கோவை மருதமலை அடிவாரத்தில் சாலை இரு புறங்களிலும் பொம்மைக் கடை, பூக்கடை, பழக்கடை, மிட்டாய் கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விழாக்காலங்களில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வதால் மருதமலை அடிவார சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கடைகள் அனைத்தும் சாலையின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து இருப்பதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

இதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் மலை அடிவாரத்தில் இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என கடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று மருதமலை அடிவார பகுதியில் உள்ள கடைகளை பொக்லைன் எந்திரம் அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More