சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படுகிறது. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் 15ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பல்கலைக்கழக நிதிக்குழு இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் இந்த ஊதிய உயர்வு 2023-24 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More