Mnadu News

சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 5 நாள்களுக்குத் தடை.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மாதத்தில் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 29 -ஆம் தேதி பருவமழை தொடங்கியதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு நாள்களாக மழை பெய்ததால், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், வருகிற 8 -ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு,பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வருவர்கள். தற்போது பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டும் , பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதியும், வருகிற 5 -ஆம் தேதி முதல் 9 -ஆம் தேதி வரை 5 நாள்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More