முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புகளை பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 395-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளையொட்டி சத்ரபதி சிவாஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சத்ரபதி சிவாஜி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். பாசம், பணிவு, குருபக்தி, நட்பு, நேசம், வீரம், வாள் பயிற்சி, குதிரை ஏற்றம் என அனைத்திலும் சிவாஜி தலைசிறந்து விளங்கினார்.அவரது வீரமும், சிறப்பான நிர்வாகமும் நமக்கு ஊக்கமளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More