தூத்துக்குடியில் சிவன் கோவில் சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகள் செந்தாமரை சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். கோவிலில் சுவாமியை வழிபட்ட பின்னர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் சில மணி நேரம் சாமி தரிசனம் செய்தார். மேலும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் சிவன் கோயிலை அடுத்து அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். செந்தாமரை சாமி தரிசனம் செய்வதை யாரும் புகைப்படம் வீடியோ எடுக்காதவாறு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More