படப்பிடிப்பிலும், பொது நிகழ்வுகளிலும் நேரம் தவறாமையை கடைபிடிப்பதில் நடிகர் அமிதாப் பச்சன் கண்டிப்பானவர் என்று சொல்லப்படுவதுண்டு. அதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.தனது வீட்டில் இருந்து ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அமிதாப் பச்சன் காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையில் டிராபிக் ஜாம் ஆனதால் அவரது கார் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.தன்னால் படப்பிடிப்பு தாமதாவதை உணர்ந்த அமிதாப் தனது காரை விட்டு இருந்து இறங்கி, பைக்கில் நின்று கொண்டிருந்த நபரிடம் லிப்ட் கேட்டு அவரது பின்னால் அமர்ந்து படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இது தொடர்பான போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமிதாப், அந்த பைக் ஓட்டிக்கு நன்றி கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More