Mnadu News

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: தலைமை ஆசிரியரைப் புரட்டியெடுத்த மாணவிகள்.

கர்நாடக மாநிலம் ஸ்ரீPரங்கப்பட்டணத்தில் செயல்பட்டு வரும் கட்டேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்குள் நுழைந்துள்ளார்.
அங்கு பள்ளி மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால், விழிப்படைந்த மாணவி, சக மாணவிகளை கூச்சலிட்டு அழைத்துள்ளார். அதற்குள் பள்ளி வகுப்பறையில் நுழைந்து தலைமையாசிரியர் கதவைத் தாழிட முயன்றுள்ளார். அப்போது கைகளில் கட்டையுடன் குவிந்த மாணவிகள் தலைமையாசிரியரை வகுப்பறையிலிருந்து வெளியே இழுத்துவந்து தாக்கினர். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளி விடுதிக்கு வந்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் தலைமையாசிரியரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அவர் பல மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவிகள் விடுதியில் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்ட தலைமையாசிரியரை பள்ளி மாணவிகள் தாக்கி விரட்டியடித்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தலைமையாசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More