மகாராஷ்டிரத்தில் முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணி, முன்னாள் முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே அணி என இரண்டாக உள்ளது. இதில் எது உண்மையான சிவசேனை அணி என இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடின. பெரும்பான்மையின்படி, முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான், உண்மையான சிவசேனை என்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதோடு, கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், மகாராஷ்டிரத்தில் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இத்தேர்தல் முடியும் வரை உத்தவ் தாக்கரே அணியினர் ‘சிவசேனை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதுகுறித்து உத்தவ் தாக்கரே கொடுத்துள்ள மனு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More