Mnadu News

சிவசேனை வழக்கு:பெரிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.

சிவசேனை கட்சி சின்னத்துக்கு ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்ரே தரப்பு உரிமை கோரின. இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் இரு பிரிவினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா கட்சி, சின்னம் முடக்கம், 16 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் அவைத்தலைவரின் அதிகாரம் தொடர்பான மூல வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends