சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கையாளும் திறனை அதிகரிக்க ஆயிரத்து 260 கோடி ரூபாயில்;, கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி திறந்து வைத்தார்.இந்நிலையில் இண்டிகோ நிறுவனமானது ஜூன் 13ஆம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் டி2-ல் இருந்து தனது சர்வதேச நடவடிக்கைகளைத் தொடங்கியது. தொழில்துறை நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச முனையத்தில் இண்டிகோவின் செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற விமான நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More