Mnadu News

சென்னையில் இடைவிடாது பெய்யும் மழை: வாகன ஓட்டிகள் கடும் அவதி.

சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 4 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் – 7 புள்ளி 7 செ.மீ ,நந்தனம் – 5 புள்ளி 2 செ.மீ ,பூந்தமல்லி – 4 புள்ளி 5 செ.மீ காரைக்கால் – 7 செ.மீ மழையும், நாகை – 4 புள்ளி 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More