தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டுள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இரு ஏரிகளிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாடிக்கு தலா 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்வதால் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More