Mnadu News

ஜனநாயகத்தை அதிகாரம்பலத்திடமிருந்து பிரதமர் விடுவித்துள்ளார்:அமித் ஷா பேச்சு.

மன் கி பாத் 100 இன் தேசிய மாநாட்டில் பங்கேற்று பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நமது ஜனநாயகத்திற்கு பிரதமர் மோடி 2 முக்கிய பங்களிப்பை செய்துள்ளார்.அதாவது முதலாவதாக அவர் ஜனநாயக அமைப்பை ஜாதிவெறி, வாரிசு அரசியல், மற்றும் அதிகாரம்பலம் ஆகியவற்றிலிருந்து விடுவித்துள்ளார். இரண்டாவதாக, அவர் பத்ம விருதுகளை ஜனநாயக முறைப்படி வழங்கி வருகிறார்.இதற்கு முன்னதாக பத்ம விருதுகள் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று பத்ம விருதுகள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதே நேரம், பிரதமர் மோடி ஒரு அரசியல்வாதியாக இருந்தும், மன் கி பாத் நிகழ்ச்சியின் 99 அத்தியாயங்களில் அவர்,அரசியல் விஷயங்களைப் பற்றி பேசவில்லை.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More