கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து, இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஜப்பானில், கடந்த ஆண்டு அந்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகி உள்ளன.

இதன் காரணமாக ஜப்பான் அரசு நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு தருவதாக கூறி உள்ளது . அதன் ஒரு பகுதியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யென் மானியமாக வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, இந்த மானியத்தை 80 ஆயிரம் யென் உயர்த்தி 5 லட்சம் யென் ஆக வழங்க முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
