Mnadu News

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்.

ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு வரும் 2 ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உள்பட பல்வேறு நட்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்திருந்தார்.இந்நிலையில், அவரது அழைப்பை ஏற்று சீன வெளியுறவு அமைச்சர் கின் காங் புதுடெல்லி வர உள்ளார். இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சீன வெளியுறவு அமைச்சர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More