Mnadu News

ஜூலையில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தகவல்.

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஒருநாள் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்தார். பின்னர் பேசியுள்ள அவர்,இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திராயன் 3ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியிருப்பதாக கூறினார்.தற்போது,சந்திராயன் 3 விண்கலத்தை ஏந்தி செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். அனைத்து சோதனைகளும் முடிந்தபிறகு இந்தியாவின் லட்சிய திட்டமான சந்திராயன் 3 அடுத்த மாதம் 12-19-க்கு இடையில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்படும் என்று கூறி உள்ளார்.

Share this post with your friends