காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் உடனான சந்திப்பில், பொதுவான ஜனநாயக கொள்கைகள் அடிப்படையில் உருவான மற்றும் நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகள் இடையேயான செயல்திட்ட உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது என தெரிவித்து உள்ளார்.இதேபோன்று, கார்கேவை அவரது இல்லத்தில் வைத்து ஆஸ்திரேலிய தூதர் பேர்ரி ஓ பேரல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இரு நாடுகள் இடையேயான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன என்று கார்கே டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More